‘வரி வசூல் இலக்கை தாண்டும்’‘வரி வசூல் இலக்கை தாண்டும்’ ... பொது துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன் 18.53 கோடி டன்னாக உயரும் பொது துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன் 18.53 கோடி டன்னாக உயரும் ...
வளைகுடா நாடுகளுக்கானமுட்டை ஏற்றுமதி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
02:19

நாமக்கல்: வளைகுடா நாடுகளுக்கு, பாகிஸ்தானிலிருந்து குறைந்த விலையில், முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது’ என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முட்டை ஒருங்கிணைப்பு மண்டலத்தில், 1,500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில், 4 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, தினமும், மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேற்கண்ட மொத்த உற்பத்தியில், 80 லட்சம் முட்டை கேரளாவிற்கும், 80 லட்சம் முட்டை உள்ளூர் விற்பனைக்கும், 70 லட்சம் முட்டை, அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் அனுப்பப்படுகின்றன.எஞ்சியுள்ள, 70 லட்சம் முட்டை வளைகுடா நாடுகளான குவைத், ஐக்கிய அரபு எமிரேட், பக்ரைன், கத்தார், சவுதி அரேபியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே, நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி சரிவடைந்து வருகிறது. 360 முட்டை கொண்ட அட்டை பெட்டியின் விலை, 26 டாலர் என்ற அளவில் நிர்ணயம் செய்தால், ஓரளவிற்கு லாபம் கிடைக்கும், ஆனால், இதனை, பாகிஸ்தான், 20 டாலருக்கு ஏற்றுமதி செய்கிறது.பாகிஸ்தானில், தற்போது கோழிப்பண்ணை தொழில் பரவலாக்கப்பட்டு, முட்டை ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளும், விலை குறைந்த பாகிஸ்தான் முட்டையை கொள்முதல் செய்வதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.இதன் காரணமாகவே, முட்டை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)