வளைகுடா நாடுகளுக்கானமுட்டை ஏற்றுமதி சரிவுவளைகுடா நாடுகளுக்கானமுட்டை ஏற்றுமதி சரிவு ... வட மாநில வரத்து சரிவால் உளுந்து விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 உயர்வு வட மாநில வரத்து சரிவால் உளுந்து விலை குவிண்டாலுக்கு ரூ.2,000 உயர்வு ...
பொது துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன் 18.53 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
02:23

புதுடில்லி: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.,) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், வரும் 2016–17ம் நிதியாண்டிற்குள், 18.53 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் தெரிவித்தார்.ஐ.ஓ.சி.,இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:மேற்கண்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமாக, 19 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றின், மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறன், தற்போது, 13.50 கோடி டன்னாக உள்ளது.
குறிப்பாக, சந்தைப் பங்களிப்பில் முதலிடத்தில் உள்ள, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 7 ஆலைகள் வாயிலான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், தற்போது, 5.42 கோடி டன்னாக உள்ளது.ஒடிசா பாரதீப் பகுதியில், 29,777 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும், புதிய ஆலைகள் மூலம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின், எண்ணெய் சுத்திகரிப்பு திறன், நடப்பாண்டில், கூடுதலாக, 1.50 கோடி டன் அதிகரிக்க உள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், எச்.பி.சி.எல்., நிறுவனம், மும்பையில் உள்ள அதன் ஆலைகளின் சுத்திகரிப்பு திறனை, 17 லட்சம் டன்னிலிருந்து, 82 லட்சம் டன்னாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆலைகளின் திறனை, 83 லட்சம் டன்னிலிருந்து, 90 லட்சம் டன்னாகவும் அதிகரிக்க உள்ளது.
பீ.பி.சி.எல்., அதன் மும்பை ஆலைகளின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை, 15 லட்சம் டன்னிலிருந்து, 1.35 கோடி டன்னாகவும், பினா ஆலையின் சுத்திகரிப்பு திறனை, 60 லட்சம் டன்னிலிருந்து, 72 லட்சம் டன்னாகவும், உயர்த்த உள்ளது.விரிவாக்கம்புதிய ஆலைகள் மற்றும் விரிவாக்க திட்டங்களால், வரும் 2016–17ம் நிதியாண்டிற்குள், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறன், 37 சதவீதம் அதிகரித்து, 18.53 கோடி டன்னாக உயரும்.பொதுத் துறை நிறுவனங்கள் தவிர்த்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் உள்ளிட்ட மூன்று தனியார் துறை நிறுவனங்களும் எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)