பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
23:35
புதுடில்லி:இரும்பு தாது உற்பத்தி, உள்நாட்டு தேவையை ஈடு செய்யும் அளவிற்கு உள்ளது என, உருக்கு மற்றும் சுரங்க துறை அமைச்சர், நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த 2010–11ம் நிதியாண்டில், நாட்டின் இரும்பு தாது உற்பத்தி, 20.71 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் இதற்கான பயன்பாடு, 10.72 கோடி டன் என்ற அளவில் இருந்தது.மேலும், 2011–12 மற்றும் 2012–13ம் நிதியாண்டுகளில், இரும்பு தாது உற்பத்தி முறையே, 16.72 கோடி டன் மற்றும் 13.58 கோடி டன் என்ற அளவில் இருந்தது.
இதே ஆண்டுகளில், இதற்கான பயன்பாடு முறையே, 10.05 கோடி டன் மற்றும் 10.36 கோடி டன் என்ற அளவில் இருந்தது.சென்ற 2013–14ம் நிதியாண்டில், இரும்பு தாது உற்பத்தி மொத்த பயன்பாட்டை (10.37 கோடி டன்) காட்டி லும், 4.80 கோடி டன் அதிகமாகவே இருந்தது.எனவே, உள்நாட்டு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களின், இரும்பு தாது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி உள்ளது.இவ்வாறு, தோமர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|