பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
23:44
புதுடில்லி:தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
கடந்த 2012–13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, முன் எப்போதும் இல்லாத வகையில், 4.7 சதவீதமாக அதாவது, 8,820 கோடி டாலராக மிகவும் அதிகரித்தது.இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், முந்தைய ஐ.மு., கூட்டணி அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. குறிப்பாக, தங்கம் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தன.மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை அதிகரித்து, 10 சதவீதமாக உயர்த்தியது.
மேலும், ரிசர்வ் வங்கி, இறக்குமதி செய்யப்படும் மொத்த தங்கத்தில், 20 சதவீதத்தை மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இது போன்ற நடவடிக்கைகளால்,சென்ற 2013–14ம் நிதியாண்டில்,நடப்பு கணக்கு பற்றாக்குறை, 3,240 கோடி டாலராக சரிவடைந்தது.அதுமட்டுமின்றி, ஜூலை 4ம் தேதி நிலவரப்படி, அன்னியச் செலாவணி கையிருப்பு, 31,640 கோடி டாலராக அதிகரிக்கவும் வழிவகை செய்தது.
எனவே, நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் என, ஜெட்லி தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|