பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:14
மும்பை:பங்கு சந்தையில், அன்னிய மற்றும் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து ஏழாவது நாளாக, பங்கு வியாபாரம் ஏற்றம் கண்டு, ‘சென்செக்ஸ்’ புதிய உச்சத்தை தொட்டது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள, டி.சி.எஸ்., பங்கு சந்தை வரலாற்றில், 5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 121.53 புள்ளிகள் அதிகரித்து, முன் எப்போதும் இல்லாத அளவில், 26,147.33 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இன்போசிஸ், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், கோல் இந்தியா, கெயில், எச்.டீ.எப்.சி., சன்பார்மா உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 27.90 புள்ளிகள் உயர்ந்து, 7,795.75 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 7,809 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|