பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:17
மும்பை: வங்கிகள், வேளாண் சாராத இதர நடவடிக்கைகளுக்கு வழங்கும் தங்க நகை அடகுக்கான, கடன் விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி தளர்த்திஉள்ளது.வங்கிகளின், வேளாண் சாரா தங்க நகை கடன், 1 லட்சம் ரூபாயை தாண்டக் கூடாது என, ரிசர்வ் வங்கி, முன்பு கட்டுப்பாடு விதித்திருந்தது.
‘இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்’ என, வங்கிகள் கோரிக்கை விடுத்தன. இதைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வேளாண் சாரா தங்க நகை கடனுக்கான விதிமுறையை தளர்த்தியுள்ளது.இதன்படி, வேளாண் சாரா தங்க நகை கடன் எவ்வளவு வழங்கலாம் என்பதை, இனி சம்பந்தப்பட்ட வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம்.இருப்பினும், கடனுக்கான கால வரம்பு, 12 மாதத்திற்கு மிகாமலும், நகைகளின் மதிப்பில், 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என, வங்கிகளை, ரிசர்வ் வங்கி, அறிவுறுத்திஉள்ளது.
குறிப்பிட்ட வங்கிகளுக்குரிசர்வ் வங்கி புதிய வரையறை:மும்பை:அதிக இடர்பாடுகள் மற்றும் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட குறிப்பிட்ட சில முன்னணி வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி புதிய நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.இதன்படி, குறைந்த சொத்து மதிப்புகளை கொண்ட வங்கிகளுக்கு, அவற்றின் இடர்பாடுகளுக்கு ஏற்ப, ஐந்து பிரிவுகளின் கீழ், அவற்றின் கூடுதல் பங்கு மூலதனத்தை, 0.20 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளும் வகையில் நெறிமுறையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், வங்கிகள் செயல்பாடு மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|