பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:22
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் முதல், ஜூலை 2ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர வெளியீட்டின் மூலம், 3,311 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.மொத்தம், ஏழு வெளியீடுகள் மூலம் மேற்கண்ட தொகை திரட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி தெரிவித்துள்ளது.
நடைமுறை மூலதனச் செலவினம் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்காக, நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி கொள்கின்றன. நிலையான வட்டி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களால், முதலீட்டாளர்கள் இவ்வகை, கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதிப்பீட்டு காலத்தில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், எஸ்.ஆர்.இ.ஐ., இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன்பத்திர வெளியீட்டை மேற்கொண்டன.மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்தும், இவ்வகை வெளியீட்டின் மூலம், தாங்கள் நிர்ணயித்த இலக்கிற்கு மேல் நிதி திரட்டி கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|