‘வருமான வரி அலுவலகம்26, 27ம் தேதிகளில் செயல்படும்’‘வருமான வரி அலுவலகம்26, 27ம் தேதிகளில் செயல்படும்’ ... ரூபாயின் மதிப்பு சிறிது உயர்ந்தது - 60.10 ரூபாயின் மதிப்பு சிறிது உயர்ந்தது - 60.10 ...
வெளி சந்தையில் 1 கோடி டன் கோதுமை விற்பனைக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2014
00:36

புதுடில்லி :மத்திய அரசு, 1 கோடி டன் கோதுமையை, வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையி லான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
உள்நாட்டு சந்தைகளில் சப்ளையை அதிகரித்து, கோதுமை விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள உபரி கோதுமை கையிருப்பை குறைக்கும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதன்படி, இந்திய உணவுக் கழகத்திடம் உபரியாக உள்ள கோதுமையில், 1 கோடி டன்னை, வெளிச்சந்தைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிச்சந்தை விற்பனைக்கான, ஒரு குவிண்டால் கோதுமையின் விலை, 1,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இம்மாத துவக்க நிலவரப்படி, இந்திய உணவுக் கழகத்திடம், 4 கோடி டன் கோதுமை கையிருப்பு உள்ளது.உள்நாட்டில், கடந்த சில நாட்களாக, கோதுமையின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடப்பு ஜூலை மாதத்தில், மொத்த விலை சந்தையில் ஒரு கிலோ கோதுமையின் விலை, 19 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 16.10 ரூபாயாக இருந்தது.கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், வெளிச்சந்தையில், 85 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், 58 லட்சம் டன் மட்டுமே விற்பனையானது. இதன் மூலம், அரசுக்கு, 9,310 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.கடந்த 2013 – 14ம் பயிர் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, சாதனை அளவாக, 9.56 கோடி டன்னாக இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)