ஆயுர்வேத மருந்து ஏற்றுமதிரூ.2,267 கோடியாக அதிகரிப்புஆயுர்வேத மருந்து ஏற்றுமதிரூ.2,267 கோடியாக அதிகரிப்பு ... அன்னிய நிறுவனங்களின் பங்கேற்பு ஆவண முதலீடு 12சதவீதம் வளர்ச்சி அன்னிய நிறுவனங்களின் பங்கேற்பு ஆவண முதலீடு 12சதவீதம் வளர்ச்சி ...
8 நிறுவனங்கள் திரும்ப பெற்றபங்குகளின் மதிப்பு ரூ.222 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
00:43

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,–ஜூன்), வெளிச் சந்தை வாயிலாக, பொதுமக்களிடமிருந்து, 8 நிறுவனங்கள், 222 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.84 கோடி பங்குகளை திரும்ப பெற்றுள்ளன.
மேற்கண்ட நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த அளவில், 297 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை திரும்ப பெற இலக்கு நிர்ணயித்திருந்தன. அதில், 75 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், மகாராஷ்டிரா சீம்லெஸ் நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டிருந்தது. ஆனால், அதில், 69 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, மோதிலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், 56 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 71 லட்சம் பங்குகளை, பொதுமக்களிடமிருந்து திரும்ப பெற்றுள்ளது. இந்நிறுவனம், 75 லட்சம் பங்குகளை திரும்ப பெற இலக்கு நிர்ணயித்திருந்தது.மேற்கண்ட இரு நிறுவனங்கள் தவிர, குஜராத் அப்பல்லோ இண்டஸ்ட்ரீஸ், இந்தோ போரக்ஸ் அண்டு கெமிக்கல்ஸ், பென்னார் இண்டஸ்ட்ரீஸ், கார்வாரே–வால் ரோப்ஸ், இன்பினிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன், எஸ் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களும், வெளிச் சந்தை மூலம், பொதுமக்களிடமிருந்து பங்குகளை திரும்ப பெற்றுள்ளன.
‘செபி’ அமைப்பு, பங்குகளை திரும்ப பெறுதல் தொடர்பாக, புதிய விதிமுறைகளை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.இதன்படி, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், பொதுமக்களிடம் உள்ள அதன் பங்குகளில், குறைந்தபட்சம், 50 சதவீதத்தை திரும்ப பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நடவடிக்கையில் இறங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம், ஒரு வருடத்திலிருந்து, 6 மாதங்களாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)