பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:43
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,–ஜூன்), வெளிச் சந்தை வாயிலாக, பொதுமக்களிடமிருந்து, 8 நிறுவனங்கள், 222 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.84 கோடி பங்குகளை திரும்ப பெற்றுள்ளன.
மேற்கண்ட நிறுவனங்கள், மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த அளவில், 297 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை திரும்ப பெற இலக்கு நிர்ணயித்திருந்தன. அதில், 75 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், மகாராஷ்டிரா சீம்லெஸ் நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டிருந்தது. ஆனால், அதில், 69 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, மோதிலால் ஆஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், 56 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 71 லட்சம் பங்குகளை, பொதுமக்களிடமிருந்து திரும்ப பெற்றுள்ளது. இந்நிறுவனம், 75 லட்சம் பங்குகளை திரும்ப பெற இலக்கு நிர்ணயித்திருந்தது.மேற்கண்ட இரு நிறுவனங்கள் தவிர, குஜராத் அப்பல்லோ இண்டஸ்ட்ரீஸ், இந்தோ போரக்ஸ் அண்டு கெமிக்கல்ஸ், பென்னார் இண்டஸ்ட்ரீஸ், கார்வாரே–வால் ரோப்ஸ், இன்பினிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன், எஸ் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களும், வெளிச் சந்தை மூலம், பொதுமக்களிடமிருந்து பங்குகளை திரும்ப பெற்றுள்ளன.
‘செபி’ அமைப்பு, பங்குகளை திரும்ப பெறுதல் தொடர்பாக, புதிய விதிமுறைகளை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.இதன்படி, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், பொதுமக்களிடம் உள்ள அதன் பங்குகளில், குறைந்தபட்சம், 50 சதவீதத்தை திரும்ப பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நடவடிக்கையில் இறங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கால அவகாசம், ஒரு வருடத்திலிருந்து, 6 மாதங்களாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|