பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:46
மும்பை:நடப்பு ஜூலை 11ம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டு வார காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 13.௬7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதையடுத்து, வங்கிகள் வழங்கிய கடன், 61,21,418 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 53,85,033 கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டிபாசிட், 13.24 சதவீதம் உயர்ந்து, 79,96,060 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதில், டிமாண்ட் டிபாசிட், 10.71 சதவீதம் அதிகரித்து, 6,50,751 கோடியிலிருந்து, 7,20,458 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று, குறித்த கால டிபாசிட், 13.50 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64,09,886 கோடியிலிருந்து, 72,75,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, வங்கிகள் வழங்கிய கடனை விட, திரட்டியடை டிபாசிட், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. திட்டங்களில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|