பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:51
கோவை:விவசாயிகள், தேங்காய் மற்றும் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என, வேளாண் பல்கலை கூறியுள்ளது.
வறட்சி:தேங்காய் உற்பத்தியில் கேரள மாநிலத்தையடுத்து தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது, பொள்ளாச்சி சந்தையில், ஒரு டன் தேங்காய், 28,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிய வறட்சியின் காரணமாக, தேங்காய் உற்பத்தி குறைந்து இருப்பதால், அதன் விலை உயர்ந்துள்ளது. தற்போது, அவல்பூந்துறை சந்தையில், ஒரு கிலோ கொப்பரை தேங்காய், 96 ரூபாய் முதல் 98 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில், இவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி சந்தை தேங்காய் விலை மற்றும் அவல்பூந்துறை சந்தை கொப்பரை விலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலையின், வேளாண் விற்பனை தகவல் மையம் ஆய்வு மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில், வரும் ஆகஸ்ட் மற்றும் செப்., மாதங்களில், பொள்ளாச்சி சந்தைகளில், ஒரு தேங்காயின் விலை, 16 முதல் 18 ரூபாய் வரை இருக்கும் என, கணித்து உள்ளது. மற்ற சந்தைகளில், அதன் விலை, பொள்ளாச்சி சந்தையை விட மூன்று ரூபாய் வரை குறைவாக இருக்கும்.
கணிப்பு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஒரு கிலோ கொப்பரையின் விலை, 100 ரூபாய் முதல் 105 ரூபாய் வரை இருக்கும் என, கணித்துள்ளது.எனவே, விவசாயிகள் அவசரம் காட்டாமல், தேங்காய் மற்றும் கொப்பரையை இருப்பு வைத்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என, வேளாண் விற்பனை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|