சென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சிசென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சி ... கோரிக்கை அடிப்படையில் பொது துறை பங்கு விற்பனை : மத்திய அரசின் புதிய திட்டம் கோரிக்கை அடிப்படையில் பொது துறை பங்கு விற்பனை : மத்திய அரசின் புதிய ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.30,995 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2014
01:52

புதுடில்லி :நடப்பு ஜூலை 1 – 25ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 30,995 கோடி ரூபாயை (500 கோடி டாலர்) எட்டியுள்ளது.இதில், நிறுவனங்களின் பங்குகளில், நிகர அளவில், 13,166 கோடியும், கடன்பத்திரங்களில், 17,829 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டு உள்ளன.மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை அதிகளவில் கவரும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டை, 49 சதவீதமாக உயர்த்த, மத்திய அமைச்சரவை குழு அண்மையில் அனுமதி வழங்கியது.இதன் மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு ஈர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்றவற்றால், அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், மூலதனச் சந்தையில், நிகர அளவில், 1.53 லட்சம் கோடி ரூபாயை (2,550 கோடி டாலர்) முதலீடு மேற்கொண்டுள்ளன.இதில், 72,961 கோடி ரூபாயை பங்குகளிலும், 80,663 கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையிலும் முதலீடு செய்துள்ளன.அன்னிய நிதி நிறுவனங்கள், 1991ம் ஆண்டிலிருந்து, இதுவரையிலுமாக, இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, நிகர அளவில், 19,600 கோடி டாலரை எட்டியுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)