பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
01:55
புதுடில்லி: மொபைல் போன் சேவையில், சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், 21 லட்சம் கிராமப்புற வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த கிராமப்புற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 30.27 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய செல்லுலார் ஆபரேட்டர் அசோசியேஷன் (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.இதற்கு முந்தைய மே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 30.06 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த கிராமப்புற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அதிகபட்சமாக, 9.66 கோடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வோடபோன் (9.09 கோடி), ஐடியா செல்லுலார் (7.68 கோடி), ஏர்செல் (2.59 கோடி) மற்றும் யுனிநார் (1.23 கோடி) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.நடப்பாண்டு மே மாதம் வரையிலான காலத்தில், ஒட்டு மொத்த கிராமப்புற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 38.21 கோடியாக உள்ளது.இதில், மொபைல் போன் (ஜி.எஸ்.எம் மற்றும் சி.டீ.எம்.ஏ.,) வாடிக்கையாளர் எண்ணிக்கை, 37.62 கோடியாகவும், சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 58.70 லட்சமாகவும் உள்ளது என, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|