பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
02:02
மும்பை :நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று, மிகவும் சுணக்கமாக இருந்தது.குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா, 0.50 சதவீதத்திற்கும் மேல் சரிவை கண்டது.ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதர ஆசிய நாடுகளை பொறுத்தவரை, பெரும்பாலான பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் (–2.69 சதவீதம்) உலோகம் (–1.51 சதவீதம்), எண்ணெய் மற்றும் எரிவாயு (–1.29 சதவீதம்), மோட்டார் வாகனம் (–0.78 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், மிகவும் குறைந்த விலைக்கு கைமாறின.அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 135.52 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,991.23 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கோல் இந்தியா, ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், எச்.யு.எல்., சன்பார்மா, விப்ரோ உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 41.75 புள்ளிகள் குறைந்து, 7,748.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|