பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
03:44
புதுடில்லி: பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), கூடுதலாக, 83,791 ஆயிரம் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்து உள்ளது.தற்போது, இந்தியாவில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட மொத்த கணக்குகளின் எண்ணிக்கை, 2,92,64,713 ஆக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 31 – 2014), 2,91,80,922 ஆக இருந்தது.ஆக, இடைப்பட்ட மூன்று மாத காலத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், கூடுதலாக, 83,791 கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன.பங்குச் சந்தை நிலவரம் நன்கு இருந்ததால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியதையடுத்து, இவ்வகை கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|