பதிவு செய்த நாள்
31 ஜூலை2014
10:35
புதிதாக, இருசக்கர வாகனங்கள் வாங்கும் போது, காப்பீடு தொகை செலுத்த வேண்டும். பின், ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகை செலுத்தி, காப்பீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், வாகனம் வாங்கும் போது, காப்பீட்டு தொகை கட்டுவதோடு சரி, ஆண்டுதோறும், புதுப்பிப்பதில்லை. போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், சாலைகளில், வாகன தணிக்கை செய்யும் போது, வாகனத்திற்கு காப்பீடு செய்யாமல் இருந்தால், அபராதம் விதிக்கின்றனர்.குறிப்பாக, மோட்டார் வாகன சட்டம், 196ன் படி, காப்பீட்டு தொகை செலுத்தாத வாகனங்களுக்கு, 500 ரூபாய்; மீண்டும் காப்பீடு செலுத்தாமல், வாகனத்தை இயக்குவது தெரியவரும் பட்சத்தில், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். வாகனத்திற்கு உரிய ஆவணம் இல்லாத பட்சத்தில், அந்த வாகனத்தை பறிமுதல் செய்யும் அதிகாரமும் இருப்பதால், காப்பீடு செலுத்துவது அவசியமாகிறது.
காப்பீடு அவசியம் ஏன்?
• விபத்து ஏற்படும் போது, வாகன ஓட்டிக்கு படுகாயம், உயிரிழப்பு ஏற்பட்டாலோ, காப்பீட்டு தொகை கிடைக்கும்.
• போலீஸ் நடவடிக்கை குறைவதுடன், பாதிக்கப்பட்டவருக்கும் இழப்பீடு கிடைக்கும்.
• விபத்தில் சிக்கி சேதமடைந்தால், பழுது பார்க்க, இழப்பீடு கிடைக்கும்.
• வாகனம் தொலைந்து விட்டாலோ, தீ, வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டாலோ இழப்பீடு கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|