பதிவு செய்த நாள்
01 ஆக2014
00:35
மறுபயன்பாட்டுக்கு உரிய, விலை உயர்ந்த மரங்களை, தனியார் நிலங்களில் வளர்ப்பதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சந்தனம், மூங்கில், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களையும், அருகில் உள்ள காடுகளில் கிடைக்காத, அபூர்வமான மர வகைகளையும், வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் வளர்க்க தடை இருந்தது.தற்போது, இதற்கென சில வழிகாட்டு விதிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வகுத்துள்ளது.
*இதன்படி இதுவரை தடை செய்யப்பட்டிருந்த அபூர்வ வகை மரங்கள் வளர்ப்புக்கென, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று, விவசாயிகள் மற்றும் வளர்ப்போர், அவர்களது சொந்த நிலங்களில், வேகமாக வளரக் கூடிய மரங்களை வளர்த்து, அவற்றை வெட்டி, வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.*நெட்டிலிங்கம் மற்றும் மூங்கில் மரங்கள் வளர்ப்பு குறித்த விதிமுறைகளும் தளர்த்தப்படும்.
*மரம் வளர்ப்பைக் கட்டுப்படுத்தக் கூடிய விதிமுறைகள், மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படுவதால், காடுகளில் வளர்க்கப்படும் மரங்களை, வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதில், சிக்கல் ஏற்படுகிறது. அதற்கும் பொதுவான விதிமுறைகள் வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.*மரங்களை வளர்ப்பதற்கான பருவ காலம் துவங்குவதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும், அது குறித்த வழிகாட்டுதலை, விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டியது குறித்து, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படும். *புதிய வழிகாட்டு முறை, விவசாயிகள், மலைவாழ் மக்கள், தனியார் நில உரிமையாளர்கள், தொழில் துறையினர் மற்றும் நிலம் வைத்திருக்கும் அனைவரும், அவரவர் நிலத்தில், அபூர்வ மற்றும் விலை உயர்ந்த மரம் வளர்க்க ஊக்கத்தை ஏற்படுத்தும்.
*காடுகளில் வளர்க்கப்படும் மரங்களை, வெட்டி, வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை, வெளிப்படையாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் செய்து முடிக்க வேண்டும் என, வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனியாக உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு, பொது விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் விட்டு மாநிலம் மரங்களைக் கொண்டு செல்லும் பணி எளிதாக்கப்படும். இதுகுறித்து, மாநில அரசுகளுக்குரிய விதிமுறைகளையும் தளர்த்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தப்படும்.இவ்வாறு, வழிகாட்டு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|