தங்கம் விலை ரூ.56 உயர்வுதங்கம் விலை ரூ.56 உயர்வு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 உயர்வு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 உயர்வு ...
தனியார் நிலங்களில் விலையுயர்ந்த மரங்கள் வளர்க்க விதிமுறைகள் தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
00:35

மறுபயன்பாட்டுக்கு உரிய, விலை உயர்ந்த மரங்களை, தனியார் நிலங்களில் வளர்ப்பதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சந்தனம், மூங்கில், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களையும், அருகில் உள்ள காடுகளில் கிடைக்காத, அபூர்வமான மர வகைகளையும், வீடுகளிலும், தனியார் நிலங்களிலும் வளர்க்க தடை இருந்தது.தற்போது, இதற்கென சில வழிகாட்டு விதிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வகுத்துள்ளது.
*இதன்படி இதுவரை தடை செய்யப்பட்டிருந்த அபூர்வ வகை மரங்கள் வளர்ப்புக்கென, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று, விவசாயிகள் மற்றும் வளர்ப்போர், அவர்களது சொந்த நிலங்களில், வேகமாக வளரக் கூடிய மரங்களை வளர்த்து, அவற்றை வெட்டி, வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.*நெட்டிலிங்கம் மற்றும் மூங்கில் மரங்கள் வளர்ப்பு குறித்த விதிமுறைகளும் தளர்த்தப்படும்.
*மரம் வளர்ப்பைக் கட்டுப்படுத்தக் கூடிய விதிமுறைகள், மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படுவதால், காடுகளில் வளர்க்கப்படும் மரங்களை, வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதில், சிக்கல் ஏற்படுகிறது. அதற்கும் பொதுவான விதிமுறைகள் வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.*மரங்களை வளர்ப்பதற்கான பருவ காலம் துவங்குவதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும், அது குறித்த வழிகாட்டுதலை, விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டியது குறித்து, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படும். *புதிய வழிகாட்டு முறை, விவசாயிகள், மலைவாழ் மக்கள், தனியார் நில உரிமையாளர்கள், தொழில் துறையினர் மற்றும் நிலம் வைத்திருக்கும் அனைவரும், அவரவர் நிலத்தில், அபூர்வ மற்றும் விலை உயர்ந்த மரம் வளர்க்க ஊக்கத்தை ஏற்படுத்தும்.
*காடுகளில் வளர்க்கப்படும் மரங்களை, வெட்டி, வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை, வெளிப்படையாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் செய்து முடிக்க வேண்டும் என, வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனியாக உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு, பொது விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் விட்டு மாநிலம் மரங்களைக் கொண்டு செல்லும் பணி எளிதாக்கப்படும். இதுகுறித்து, மாநில அரசுகளுக்குரிய விதிமுறைகளையும் தளர்த்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தப்படும்.இவ்வாறு, வழிகாட்டு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)