பதிவு செய்த நாள்
01 ஆக2014
16:51
மும்பை : பங்குசந்தைகளில் வாரத்தின் கடைசிநாளில் கடும் சரிவை சந்தித்தன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் ஆட்டம் கண்டன. இதனால் ஒருநாளில் சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிந்து கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 414.13 புள்ளிகள் சரிந்து 25,480.84-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 118.70 புள்ளிகள் சரிந்து 7,602.60-ஆகவும் முடிந்தன. கடந்த இருவாரங்கள் ஏற்றம் கண்ட பங்குசந்தைகள் இந்த வாரத்தில் சென்செக்ஸ் மட்டும் 646 புள்ளிகள் சரிந்துள்ளன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக எண்ணெய், எரிவாயு, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட அநேக பங்குகள் சரிந்தன. ஐந்து நிறுவன பங்குகள் மட்டும் ஏற்றம் பெற்று இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|