பதிவு செய்த நாள்
02 ஆக2014
00:06
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), நாட்டின் நிதி பற்றாக்குறை, 2.99 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இது, பட்ஜெட் மொத்த மதிப்பீட்டில், 56.1 சதவீதமாகும்.மதிப்பீட்டு காலாண்டில், நாட்டின் வரி வசூல், 1.14 லட்சம் கோடி ரூபாயாகவும், அதேசமயம், அரசின் மொத்த செலவினம், 4.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து, கணக்கீட்டு காலாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 2.99 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
நிதி பற்றாக்குறை என்பது அரசின் வருவாயை விட, செலவினம் அதிகரிக்கும் போது ஏற்படுகிறது.கடந்த 2013–14ம் நிதியாண்டில், நிதி பற்றாக்குறை, 5.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.5 சதவீதமாகும்.இது, முந்தைய நிதியாண்டில், 4.9 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது. வரும் 2016–17ம் நிதியாண்டிற்குள், நிதி பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|