பதிவு செய்த நாள்
02 ஆக2014
00:18
சென்னை:‘‘தமிழகத்தில், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள், சிமென்ட் விலை குறையும், என, தொழில்துறை அமைச்சர் தங்கமணிதெரிவித்தார்.
சட்டசபையில், எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன், சிமென்ட் விலை தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை குறித்து பேசியபோது, அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டு பேசினார். அப்போது, அவர் கறியதாவது:ஜெயலலிதா முதல்வராக இருந்த, 2001 – 06ல், சிமென்ட் விலை, ஒரு மூட்டை, 160 ரூபாயாக இருந்தது. கருணாநிதி ஆட்சியில், 2008ல், சிமென்ட் விலை, 230 ரூபாயாக உயர்ந்தது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், சிமெண்ட் உற்பத்தி குறைந்தது.
தற்போது, முதல்வர் எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக, இந்த ஆண்டு, அரியலுாரில், 5 லட்சம் டன், ஆலங்குளத்தில், 2 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தியாக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை விரைவில், மக்களுக்கு வழங்கப்படும். தற்போது, மக்களுக்கு, ஒரு மூட்டை சிமென்ட், 270 ரூபாய்க்கு, வழங்கப்படுகிறது.ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள், சிமென்ட் விலை குறையும். தெலுங்கானாவில், சிமென்ட் ஆலை அதிபர்களை அழைத்து பேசி, சிமென்ட் விலையை குறைத்துள்ளதாக, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அங்கு, கட்டடம் கட்டுவோர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு மட்டும், 25 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கும் சிமென்ட் விலை குறைக்கப்படவில்லை. தமிழகத்தில், பொதுமக்களுக்கு சிமென்ட் விலையை குறைத்து வழங்குகிறோம்.இவ்வாறு, தங்கமணி தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|