‘ஆஸ்திரேலியா வரும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயரும்’‘ஆஸ்திரேலியா வரும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயரும்’ ... மருத்துவ தொழில்நுட்ப துறை சந்தை ரூ.3 லட்சம் கோடியாக வளர்ச்சி காணும் மருத்துவ தொழில்நுட்ப துறை சந்தை ரூ.3 லட்சம் கோடியாக வளர்ச்சி காணும் ...
வெளிமாநில நிலக்கடலை வரத்து சரிவுதமிழகத்தில் கிலோவுக்கு ரூ.20 விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
00:38

சேலம் :ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நிலக்கடலை வரத்து சரிவால், நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு, 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நிலக்கடலையின் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.ஆந்திரா ,தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வாரத்துக்கு, 70 லாரிகளில் நிலக்கடலை விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த மாநிலங்களில் தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், அறுவடையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநில நிலக்கடலை வரத்து, 20 லாரிகளாக குறைந்து விட்டது. ஈரோடு மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் எண்ணெய் ஆலைகளுக்கு, நிலக்கடலை கிடைக்காததால், கடலை எண்ணெய் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.தட்டுப்பாடுமார்க்கெட்டில் நிலக்கடலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் நிலக்கடலை பருப்பு (பச்சை) குவிண்டால், 7,800 ரூபாய்க்கு விற்றது, 9,700 ரூபாயாகவும், வறுத்த பருப்பு குவிண்டால், 8,800 ரூபாய்க்கு விற்றது, 9,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, சில்லரை விற்பனை விலையில், நிலக்கடலை கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாயாகவும், வறுத்த பருப்பு கிலோ, 85 ரூபாய்க்கு விற்றது, 110 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)