‘பாரா­முகம் காட்டும் பாகிஸ்தான்நீல­கிரி தேயிலை வர்த்­த­கத்தில் பாதிப்பு‘பாரா­முகம் காட்டும் பாகிஸ்தான்நீல­கிரி தேயிலை வர்த்­த­கத்தில் பாதிப்பு ... கோல் இந்­தியா நிறு­வனம்உற்­பத்தி இலக்கை எட்­ட­வில்லை கோல் இந்­தியா நிறு­வனம்உற்­பத்தி இலக்கை எட்­ட­வில்லை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் இழப்பு ரூ.1.78ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
00:10

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும் வருவாய் இழப்பு, தற்போது, 1.78 ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த இழப்பு, நடப்பு ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன் எப்போதும் இல்லாத அளவில், 1.33 ரூபாயாக குறைந்து காணப்பட்டது.
விலை கட்டுப்பாடு:இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் ‘காஸ்’ உள்ளிட்டவற்றை சந்தைப்படுத்தி வருகின்றன.இதில், பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து கொள்கின்றன.
ஆனால், இதர பெட்ரோலிய பொருட்களின் மீதான விலை கட்டுப்பாடு நீடிப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.எனினும், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை படிப்படியாக விலக்கி கொள்ளும் வகையில், மாதந்தோறும், அதன் விலையை, 50 காசுகள் உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு, முந்தைய ஐ.மு., அரசு அனுமதி அளித்தது.
மதிப்பீடு:இதன்படி, கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி முதல், இதுவரையில், ஒட்டுமொத்த அளவில், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு, 11.24 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில், 32.98 ரூபாயும், சமையல் ‘காஸ் சிலிண்டர்’ விற்பனையில், 447.87 ரூபாயும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.தற்போதைய விலை நிலவரப்படி, மேற்கண்ட மூன்று நிறுவனங்களுக்குஏற்படும் வருவாய் இழப்பு, தினமும், 230 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய இருவார காலத்தில், இந்த இழப்பு, 226 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த வருவாய் இழப்பு, 91,665 கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 1,39,869 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)