பதிவு செய்த நாள்
20 ஆக2014
00:13
புதுடில்லி: சென்ற ஜூலையில், தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீட்டின் வாயிலாக, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 2,866 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, 11 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், 28 வெளியீடுகள் மூலம் மேற்கண்ட தொகை திரட்டப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் தான், இந்திய நிறுவனங்கள் கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம் குறைந்தபட்சமாக, 2,089 கோடி ரூபாயை திரட்டியிருந்தன.
அதன் பின், சென்ற ஜூலையில் தான், இவ்வகை வெளியீடு மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை இந்த அளவிற்கு குறைந்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், மொத்தம் 159 வெளியீடுகள் மூலம், இந்திய நிறுவனங்கள் 18,326 கோடி ரூபாயை திரட்டி கொண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|