பதிவு செய்த நாள்
20 ஆக2014
00:19
புதுடில்லி: நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை, 84 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 கோடியிலிருந்து, 1.84 கோடியாக அதிகரித்துள்ளது என, ஐ.டீ.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னடைவு:நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜன.,–மார்ச்), உள்நாட்டில் ஸ்மார்ட் போன் விற்பனை, கடந்தாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 186 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.76 கோடியாக அதிகரித்திருந்தது.எனவே, அதனுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை வளர்ச்சி பின்னடைவை கண்டுள்ளது என, ஐ.டீ.சி., தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையில், சாம்சங் நிறுவனம், 29 சதவீத சந்தை பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மைக்ரோமேக்ஸ் (18 சதவீதம்), கார்பன் (8 சதவீதம்) மற்றும் லாவா (6 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையில், சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ள போதிலும், உள்நாட்டை சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை ஏற்படுத்தி, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில், குறைந்த விலை பிரிவு மொபைல் போன் விற்பனையில், அந்நிறுவனம் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்துவ தோடு, உயர்வகை ஸ்மார்ட் போன் பிரிவிலும் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என, ஐ.டீ.சி.,யின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் (தெற்கு ஆசியா) ஜெய்தீப் தெரிவித்தார்.
குறைந்த விலை:நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், உள்நாட்டில், ஒட்டுமொத்த மொபைல் போன் விற்பனை, 6.32 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகம்.மதிப்பீட்டு காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விற்பனையில், 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட் போன்களின் பங்களிப்பு, 81 சதவீதமாகும் என, ஐ.டீ.சி., மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|