பதிவு செய்த நாள்
20 ஆக2014
16:54
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து 6 நாட்கள் ஏற்றத்தை சந்தித்த நிலையில் 7வது நாளில் சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தை தொட்டன. கடந்த 6 நாட்கள் ஏற்ற கண்டதன் வெளிப்பாடாக முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 106.38 புள்ளிகள் சரிந்து 26,314.29-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 22.20 புள்ளிகள் சரிந்து 7,875.30-ஆகவும் முடிந்தன. முன்னதாக இன்றைய வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 26,504.42 புள்ளிகளையும், நிப்டி 7,922.70 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தன. கடந்த 6 நாட்களில் சென்செக்ஸ் 1091 புள்ளிகளும், நிப்டி 329 புள்ளிகளும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய், எரிவாயு பங்குகள் 1.32 சதவீதமும், எப்எம்சிஜி பங்குகள் 0.70 சதவீதமும், ஆட்டோ பங்குகள் 0.56 சதவீதமும் சரிந்தன. அதேசமயம் மருத்துவம், எரிசக்தி, மற்றும் ஐடி தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|