பதிவு செய்த நாள்
22 ஆக2014
17:20
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சிறிய ஏற்றத்துடன் முடிந்தாலும் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. அதிலும் நிப்டி முதன்முறையாக 7900 புள்ளிகளை தாண்டி முடிந்துள்ளது. ஐடி., மற்று வங்கி தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 59.44 புள்ளிகள் உயர்ந்து 26,419.55-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 22.10 புள்ளிகள் உயர்ந்து 7,913.20-ஆக முடிந்தது. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது நிப்டி அதிகபட்சமாக 7,922.70 புள்ளிகள் வரை சென்றது.
இன்றைய வர்த்தகத்தில், இன்போசிஸ் 1.65 சதவீதம், டிசிஎஸ்., 1.22 சதவீதம், விப்ரோ 1.19 சதவீதம் உயர்ந்து இருந்தன. இவைகள் தவிர்த்து எஸ்பிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி போன்ற பங்குகளும் ஏற்றம் கண்டு இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|