பதிவு செய்த நாள்
27 ஆக2014
07:16
சேலம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழக பட்டு வேட்டி, சேலைகளுக்கு, கேரளாவில் மவுசு அதிகரித்துள்ளது.கேரளா:கேரளாவில், ஓணம் பண்டிகை, செப்., 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பட்டு ஜவுளிகள், அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.சேலம், அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை ஆகிய இடங்களில் வேட்டியும், கொண்டலாம்பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, நங்கவள்ளி, மேச்சேரி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், மேட்டூர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆகிய இடங்களில் இருந்து பட்டு சேலையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஜரிகை:கேரளாவில் ஓணம் பண்டிகையை யொட்டி, சேலம் பட்டு வேட்டி, சேலைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை, 10 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு வேட்டி, சேலைகள் அனுப்பப்பட்டுள்ளன.வேட்டி மற்றும் சேலைகளில் ஜரிகை பார்டரின் அளவுக்கு ஏற்றாற் போல், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பட்டு வேட்டி, 900 முதல் 3,500 ரூபாய் வரையிலும், பட்டு சேலை, 1,000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|