பதிவு செய்த நாள்
28 ஆக2014
00:45
மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து, அன்னிய முதலீடு வரத்து நன்கு உள்ளதால், நேற்று, ‘சென்செக்ஸ் மற்றும் ‘நிப்டி’, 0.40 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டின.
நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், வங்கி, எண்ணெய், எரிவாயு மற்றும் நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், முதலீட்டாளர்களிடையே வரவேற்பை இழந்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 117.34 புள்ளிகள் அதிகரித்து, 26,560.15 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., டாட்டா மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சேசா ஸ்டெர்லைட், என்.டி.பி.சி., பெல் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி 31.30 புள்ளிகள் உயர்ந்து, 7,936.05 புள்ளிகளில் நிலை பெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|