பதிவு செய்த நாள்
28 ஆக2014
01:35
புதுடில்லி:நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் மின் உற்பத்தி திறன், கூடுதலாக, 4,998 மெகாவாட் அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே கால கூடுதல் மின் உற்பத்தியுடன் (2,512 மெகாவாட்) ஒப்பிடுகையில், ஏறக்குறைய இரண்டு மடங்கு (98.98 சதவீதம்) அதிகம் என, மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
மேற்கண்ட கூடுதல் மின் உற்பத்தி திறனில், அனல் மற்றும் நீர் மின்சாரத்தின் பங்களிப்பு முறையே, 4,731 மெகாவாட் மற்றும் 267 மெகாவாட் என்ற அளவில் உள்ளன. இவை முன், முறையே, 2,380 மெகாவாட் மற்றும் 132 மெகாவாட் என்ற அளவில் இருந்தன.ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன், 2,50,257 மெகாவாட்டாக உள்ளது என, சி.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்ற 2013ம் ஆண்டில், காற்றாலை மூலம் அதிக மின் உற்பத்தி மேற் கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில், சென்ற 2013ம் ஆண்டில், காற்றாலை மூலம், கூடுதலாக, 1,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பட்டியலில், சீனா, 16,100 மெகாவாட் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. மதிப்பீட்டு ஆண்டில் மட்டும், சர்வதேச அளவில் கூடுதலாக, 35 ஆயிரம் மெகாவாட் திறனில்காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, உலகளவில், காற்றாலை வாயிலான ஒட்டு மொத்த மின் உற்பத்தி திறன், 3.18 லட்சம் மெகாவாட்டைஎட்டியுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|