பதிவு செய்த நாள்
28 ஆக2014
01:48
புதுடில்லி,: சென்ற ஜூலையில், விமான சேவை குறைபாடுகள் தொடர்பாக, பயணிகள் அளித்த புகார்களின் எண்ணிக்கை, ஜூன் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.,), சென்ற ஜூலையில், விமானங்கள் தாமதம் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பாக, விமான பயணிகள் அளித்த புகார்களின் எண்ணிக்கை, 581ஆக குறைந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில், 900ஆக அதிகரித்து காணப்பட்டது.
அளிக்கப்பட்ட மொத்த புகார்களில், 30 சதவீதம், திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டது அல்லது தாமதங்கள் தொடர்பானதாகும். மேலும், 25 சதவீத புகார்கள் வாடிக்கையாளர் சேவை குறைபாடு காரணமாக அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயணிகள் உடைமைகள் காணாமல் போனது குறித்து, 18 சதவீத புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது, ஜூன் மாதத்தில், 23 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், ஏர் – இந்தியா விமானச் சேவை நிறுவனத்தின் மீது, விமான பயணிகள், அதிகபட்சமாக, 213 புகார்களை அளித்துள்ளனர். இதையடுத்து, இண்டிகோ (92), கோஏர் (81), ஜெட்ஏர்வேஸ் (61) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
இதுகுறித்து, டி.ஜி.சி.ஏ.,வின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பயணிகள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைஅடுத்து, இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.மேலும், விமான நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் சேவையின் தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, விமானங்கள் ரத்து செய்யப்படும் போதும், தாமதமாகும் போதும், பயணிகளுக்கு தேவையான வசதிகளை விமானச் சேவை நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என, வலியுறுத்தப் பட்டுள் ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சென்ற ஜூலை மாதத்தில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 7.19 சதவீதம் அதிகரித்து, 52.16 லட்சமாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், இந்த எண்ணிக்கை, 48.66 லட்சமாக இருந்தது. கணக்கீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக, 16 லட்சம் விமான பயணிகளை கையாண்டு உள்ளது.இதையடுத்து, ஏர் – இந்தியா (9.40 லட்சம்), ஜெட் ஏர்வேஸ் (8.17 லட்சம்), கோ – ஏர் (4.80 லட்சம்) மற்றும் ஜெட்லைட் (2.04 லட்சம்) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|