பதிவு செய்த நாள்
28 ஆக2014
17:27
மும்பை : இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. அதிகளவில் அந்நிய முதலீடுகள் வந்ததாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகள் காணப்பட்ட உயர்வாலும், மோடி அரசு நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும் பங்குசந்தைகளில் முக்கிய நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. மேலும் முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 77.96 புள்ளிகள் உயர்ந்து 26,638.11-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 18.30 புள்ளிகள் உயர்ந்து 7,954.35-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பெல், எல்அண்ட்டி., ஐசிஐசிஐ., ஓன்ஜிசி., விப்ரோ, கெயில் உள்ளிட்ட 17 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 12 நிறுவன பங்குகள் சரிந்தும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்கு மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|