பதிவு செய்த நாள்
31 ஆக2014
00:38
சென்னை:‘‘எல்.ஐ.சி., நிறுவனம், 58வது ஆண்டில், அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பொதுமக்களிடம், நேரில் சென்று, காப்பீட்டு திட்டங்களில் சேர்க்க உள்ளோம்,’’ என, எல்.ஐ.சி., தென் மண்டல மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.,), 1956 செப்., 1ம் தேதி துவக்கப்பட்டது. தற்போது, 58வது ஆண்டில், அடியெடுத்து வைக்கிறது. எல்.ஐ.சி., சமூக நல திட்டங்களில், 2 லட்சம் கோடி ரூபாய்; மத்திய, மாநில அரசு திட்டங்களில், 9 லட்சம் கோடி ரூபாய்; ஐந்தாண்டு திட்டங்களில், 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தென் மண்டலம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கியது. எல்.ஐ.சி., தமிழகத்தில், 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
தற்போது, 58வது ஆண்டு துவங்குவதை முன்னிட்டு, வரும், 7ம் தேதி வரை, பொதுமக்கள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அவர்களை, எல்.ஐ.சி., காப்பீட்டு திட்டங்களில், சேர்க்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|