பதிவு செய்த நாள்
31 ஆக2014
00:47
மும்பை:இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 4,860 கோடி ரூபாய் (81 கோடி டாலர்) குறைந்து, 19.11 லட்சம் கோடி ரூபாயாக (31,858 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 4 கோடி டாலர் உயர்ந்து, 31,939 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 78 கோடி டாலர் சரிவடைந்து, 29,132 கோடி டாலராக குறைந்துள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,117 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 2 கோடி டாலர் குறைந்து, 439 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 79 லட்சம் டாலர் குறைந்து, 169 கோடி டாலராகவும் சரிவடைந்துள்ளன.என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|