பதிவு செய்த நாள்
31 ஆக2014
01:07
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பொரிகடலை விலை, மூடைக்கு ரூ.50 உயர்ந்தது. ஆனால், பருப்பு விலைகளில் மாற்றமில்லை.எண்ணெய் மார்க்கெட்டில் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் கடலை எண்ணெய் (15 கிலோ டின்) 1,400, நல்லெண்ணெய் 3,200 , சன்பிளவர் எண்ணெய் 1,150 ரூபாயாக உள்ளன. இறக்குமதி அதிகரிப்பால் டின்னுக்கு 30 ரூபாய் குறைந்து, பாமாயில் 860 ரூபாயாக உள்ளது. 80 கிலோ நிலக்கடலை பருப்பு 5,100 ரூபாய்க்கும், 100 கிலோ கடலை புண்ணாக்கு 4,300 ரூபாய்க்கும் விற்பனையானது.
100 கிலோ சர்க்கரை மூடைக்கு 5 ரூபாய் குறைந்து 3,215 ரூபாயாக உள்ளது. 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,040 ரூபாய்க்கும், 55 கிலோ பொரிகடலை மூடைக்கு 50 ரூபாய் அதிகரித்து 2,510 ரூபாய்க்கும் விற்பனையானது.100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை 5,800, பருவட்டு 6,500, நாட்டு உளுந்து 7,300 ரூபாய்க்கு விற்பனையானது.
100 கிலோ உளுத்தம் பருப்பில் பர்மா பொடிவகை 7,900, பருவட்டு வகை 8,300, நாடு வகை 9,500 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ முதல் ரக பாசிப்பருப்பு 9,200, இரண்டாம் ரகம் 9,000 ரூபாயாக உள்ளது. 100 கிலோ துவரம் பருப்பில் நாடுவகை 7,700, இரண்டாம் வகை 6,800, பொடி வகை 6,500 ரூபாய்க்கு விற்பனையானது. இவற்றின் விலைகளில் மாற்றமில்லை. நாட்டு வத்தல் வரத்து இல்லை. 100 கிலோ ஆந்திரா குண்டூர் வத்தல் 7,800 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|