பதிவு செய்த நாள்
31 ஆக2014
01:10
புதுடில்லி:மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.நம்பிக்கைஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்லும் வகையில், மத்திய அரசு, பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கும் அரசின் முடிவால், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.மேலும், உள்நாட்டில், தயாரிப்பு மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.வரி தொடர்பான பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணும் வகையில், சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. இதையடுத்து, ரியல் எஸ்டேட் துறையிலும் விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது.
காப்பீட்டு துறையில், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த மசோதா பார்லிமென்டின் அடுத்த குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்.பங்கு விற்பனைமத்திய அரசு, தயாரிப்பு மற்றும் அடிப்படை கட்டுமான துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பொதுத் துறை பங்கு விற்பனையில், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரியை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஊக்கமளிப்பதாக உள்ளது. இனி, வரும் காலாண்டுகளிலும், பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு, ஜெட்லி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|