கடந்த வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்வுகடந்த வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்வு ... கனி­மங்கள் உற்­பத்திமதிப்பு ரூ.17,615 கோடி கனி­மங்கள் உற்­பத்திமதிப்பு ரூ.17,615 கோடி ...
பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது: ஜெட்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2014
01:10

புதுடில்லி:மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.நம்பிக்கைஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்லும் வகையில், மத்திய அரசு, பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கும் அரசின் முடிவால், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.மேலும், உள்நாட்டில், தயாரிப்பு மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.வரி தொடர்பான பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணும் வகையில், சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ரயில்வேயில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. இதையடுத்து, ரியல் எஸ்டேட் துறையிலும் விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது.
காப்பீட்டு துறையில், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த மசோதா பார்லிமென்டின் அடுத்த குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்.பங்கு விற்பனைமத்திய அரசு, தயாரிப்பு மற்றும் அடிப்படை கட்டுமான துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பொதுத் துறை பங்கு விற்பனையில், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரியை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஊக்கமளிப்பதாக உள்ளது. இனி, வரும் காலாண்டுகளிலும், பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு, ஜெட்லி கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)