ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.56 குறைவு ... வெங்காயம் இறக்குமதிகட்டுப்பாடுகள் தளர்வு வெங்காயம் இறக்குமதிகட்டுப்பாடுகள் தளர்வு ...
தனிப்பட்ட கடன் பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டப்பட்ட தொகை 55 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
00:28

புதுடில்லி: இந்திய நிறுவனங்கள், தங்களின் மூலதனத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், நிறுவன முதலீட்டாளர்களுக்கு, தனிப்பட்ட கடன்பத்திரங்களை ஒதுக்கீடு செய்து திரட்டிய தொகை, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 55 சதவீதம் சரிவடைந்து, 43,147 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 96,186 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், தனியார் துறை நிறுவனங்கள், திரட்டிய தொகை, 38,161 கோடியிலிருந்து, 28,991 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே போன்று, நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் இவ்வகை வெளியீட்டின் வாயிலாக திரட்டிய தொகை, 72 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 47,272 கோடியிலிருந்து, 13,058 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், 8,568 கோடி ரூபாய் திரட்டியிருந்தன. இது, கணக்கீட்டு காலாண்டில், முற்றிலும் நின்றுபோயுள்ளது.தனியார் நிறுவனங்களை பொறுத்த மட்டில், எச்.டி.எப்.சி., நிறுவனம், இவ்வகை வெளியீட்டின் மூலம் அதிகபட்சமாக, 4,450 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.
இதையடுத்து, எக்சிம் பேங்க் (3,018 கோடி ரூபாய்), ஐ.ஓ.டி. உட்கல் (3 ஆயிரம் கோடி), ஐ.டி.எப்.சி. (2,730 கோடி) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (2,500 கோடி) உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.நிறுவனங்கள், கடந்த 2013–14ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், 2.71 லட்சம் கோடி ரூபாயை திரட்டியிருந்தன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 3.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)