பதிவு செய்த நாள்
03 செப்2014
00:06
புதுடில்லி:நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்.,– ஜூன்), டேப்லெட் கம்ப்யூட்டர்கள் விற்பனை, 8.50 லட்சமாக உயர்ந்துள்ளது.இது, முதல் காலாண்டில் (ஜன.,– மார்ச்) மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் ஒப்பிடுகையில், (7.80 லட்சம்) 9 சதவீதம் அதிகமாகும் என, என, ஐ.டீ.சி. ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் டேப்லெட் கம்ப்யூட்டர் விற்பனை, 13.10 லட்சமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, கணக்கீட்டு காலாண்டில், இதன் விற்பனை, 34 சதவீதம் குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த டேப்லெட் விற்பனையில், சாம்சங் நிறுவனம், 19 சதவீத பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, உள்நாட்டைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் (14 சதவீதம்), அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் (9 சதவீதம்), லெனோவா (7 சதவீதம்) மற்றும் டேட்டாவிண்ட் (6 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று கொண்டதையடுத்து, வர்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்படைய துவங்கியுள்ளன. பொருளாதார மந்த நிலை மாறி வருவதையடுத்து, வரும் மாதங்களில் டேப்லெட் விற்பனை மேலும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என, ஐ.டீ.சி. நிறுவனத்தின் மூத்த சந்தை ஆய்வாளர் கரண் தக்கர் தெரிவித்தார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|