பதிவு செய்த நாள்
08 செப்2014
00:39
புதுடில்லி :சென்ற ஜூலையில், தென் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 41.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.68 கோடி கிலோவிலிருந்து, 2.39 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தின் தேயிலை உற்பத்தி, 1.34 கோடி கிலோவிலிருந்து, 1.80 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இதே போன்று கேரளாவிலும் இதன் உற்பத்தி, 31.60 லட்சம் கிலோவிலிருந்து, 53.60 லட்சம் கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம் வட மாநிலங்களில் இதன் உற்பத்தி, 13.83 கோடி கிலோவிலிருந்து, 13.82 கோடி கிலோவாக சற்று குறைந்துள்ளது.
குறிப்பாக அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 3.22 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 9.47 கோடி கிலோவில் இருந்து, 9.16 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.ஒட்டு மொத்த அளவில், சென்ற ஜூலையில், இந்தியாவின் தேயிலை உற்பத்தி, 4.49 சதவீதம் அதிகரித்து, 15.51 கோடி கிலோவிலிருந்து, 16.20 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் (ஜன.,–ஜூலை) நாட்டின் தேயிலை உற்பத்தி, 55.39 கோடி கிலோவிலிருந்து, 54.30 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது என, தேயிலை வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|