பதிவு செய்த நாள்
10 செப்2014
00:27
குன்னுார் :சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு ஒதுக்கியுள்ள, 20 ஆயிரம் கோடி ரூபாய், மாநில அரசுகள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 121வது ஆண்டு கருத்தரங்கின் நிறைவு நாளில் மத்திய தொழில் வணிக துறை கூடுதல் செயலர் ரஜனி ரஞ்சன் ராஷ்மி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அகில இந்திய அளவில் ஆன்–லைனில் தேயிலை ஏலத்தை நடத்தும், ‘ஒரே நாளில் இந்தியா’ என்ற திட்டம் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.12வது ஐந்தாண்டு திட்டம் கிடப்பில் உள்ளதால், மானியங்கள் தொழிற்சாலைகளுக்கு கிடைக்காமல் உள்ளது.இதனால், 11வது ஐந்தாண்டு திட்டத்தில் உள்ள மானியங்களை தொடர்ந்து செயல்படுத்திவருகிறோம்.
12வது திட்டம் எப்போது நடைமுறைக்கு வருகிறதோ அப்போது, புதிய திட்டங்கள் செயல் படுத்தி, மானியம் வழங்கப்படும்.சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக, 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் மாநில அரசுகள் மூலமாக நடைமுறைப் படுத்தப்படும்.இவ்வாறு, ராஷ்மி பேசினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|