பதிவு செய்த நாள்
14 செப்2014
06:32
குன்னுார் :இறக்குமதி செய்யப்படும் ரப்பருக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும்’ என்று, குன்னுாரில் நடந்த தோட்ட அதிபர்கள் சங்க கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.விலை வீழ்ச்சிகுன்னுார் உபாசி அரங்கில், 121வது ஆண்டு தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்ற தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் பீட்டர் மத்தாயிஸ் கூறியதாவது:உலகளவில் 2013ல், 120 லட்சம் டன் அளவிற்கு ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், இந்தோனேசியா, வியட்நாமில் இருந்து, 3.25 லட்சம் டன் ரப்பரை இந்தியா இறக்குமதி செய்து உள்ளது.இதனால், உள்நாட்டில், ரப்பர் விலை வீழ்ச்சி கண்டு, உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து, இந்தியாவில், இதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
வாசனை திரவியங்களும் இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க, கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.கடந்த 2013ம் ஆண்டு, உலகளவில், 490 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது, புதிய சாதனையாகும். சீனா, இந்தியா, கென்யா, இலங்கை ஆகிய நாடுகள், தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் உள்ளன.திறந்தவெளி விற்பனை70 சதவீத தேயிலை துாள், ஏலம் மூலம் விற்பனை செய்ய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இதனால், பாதிப்பு ஏற்படும். பொருளாதார மேம்பாட்டிற்காக, எங்கு விலை கிடைக்கிறதோ அங்கு விற்பனை செய்ய, தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
காபி வாரியத்தின் ஆராய்ச்சியில் தொய்வு உள்ளது. உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, காபி வாரியம் முன்வர வேண்டும்.தேயிலை சட்டத்தை மாற்றி அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தோட்ட அதிபர்களிடமும் இதுகுறித்த கருத்துக்களை கேட்க வேண்டும்.தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவிய விளைபொருட்களை, கூடுதலாக மகசூல் செய்து, நல்ல விலை கிடைக்கும் வகையிலான மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியம். இதற்காக திறந்தவெளி விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, பீட்டர் மத்தாயிஸ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|