காய்கறி உற்பத்தியை அதிகரிக்கஇமாச்சலில் பயிற்சிகாய்கறி உற்பத்தியை அதிகரிக்கஇமாச்சலில் பயிற்சி ... முன்பேர சந்தை வர்த்தகம் ரூ.24.46 லட்சம் கோடியாக சரிவு முன்பேர சந்தை வர்த்தகம் ரூ.24.46 லட்சம் கோடியாக சரிவு ...
நாட்டின் மறைமுக வரி வசூல் 4.6 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2014
06:35

புதுடில்லி: நாட்டின் மறைமுக வரி வசூல், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாத காலத்தில், 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,94,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டு இலக்கில், 31.2 சதவீதமாகும்.சேவை வரிகடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மறைமுக வரி வசூல், 1,85,881 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மறைமுக வரி பிரிவின் கீழ் உள்ள சுங்கம் மற்றும் உற்பத்தி வரி வசூல், கணக்கீட்டு காலத்தில், மிதமான அளவிலேயே உயர்ந்துள்ளது.சேவை வரி வசூலை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, எதிர்மறை வரிவிதிப்பு பட்டியல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, இப்பட்டியலில் அடங்கியுள்ளவை தவிர்த்து, இதர சேவைகள் அனைத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.இதன் பயனாக, மதிப்பீட்டு காலத்தில், சேவை வரி வசூல், 15.1 சதவீதம் அதிகரித்து, 53,751 கோடியிலிருந்து, 61,870 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சுங்க வரி வசூல், 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 70,999 கோடியிலிருந்து, 71,207 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போன்று, உற்பத்தி வரி வசூலும், 0.5 சதவீதம் அளவிற்கே உயர்ந்து, 61,131 கோடியிலிருந்து, 61,415 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் மூலம், 6.24 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது.சுங்க வரிசென்ற ஆகஸ்ட் மாதத்தில், மறைமுக வரி வசூல், 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,644 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.குறிப்பாக, சுங்க வரி வசூல், 8 சதவீதம் உயர்ந்து, 13,782 கோடி ரூபாயாகவும், உற்பத்தி வரி வசூல், 9.9 சதவீதம் அதிகரித்து, 15,902 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.இதே போன்று, சேவை வரி வசூலும், 9 சதவீதம் உயர்ந்து, 10,960 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 10,059 கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)