பதிவு செய்த நாள்
14 செப்2014
06:35
புதுடில்லி: நாட்டின் மறைமுக வரி வசூல், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாத காலத்தில், 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,94,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டு இலக்கில், 31.2 சதவீதமாகும்.சேவை வரிகடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மறைமுக வரி வசூல், 1,85,881 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மறைமுக வரி பிரிவின் கீழ் உள்ள சுங்கம் மற்றும் உற்பத்தி வரி வசூல், கணக்கீட்டு காலத்தில், மிதமான அளவிலேயே உயர்ந்துள்ளது.சேவை வரி வசூலை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, எதிர்மறை வரிவிதிப்பு பட்டியல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, இப்பட்டியலில் அடங்கியுள்ளவை தவிர்த்து, இதர சேவைகள் அனைத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.இதன் பயனாக, மதிப்பீட்டு காலத்தில், சேவை வரி வசூல், 15.1 சதவீதம் அதிகரித்து, 53,751 கோடியிலிருந்து, 61,870 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சுங்க வரி வசூல், 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 70,999 கோடியிலிருந்து, 71,207 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போன்று, உற்பத்தி வரி வசூலும், 0.5 சதவீதம் அளவிற்கே உயர்ந்து, 61,131 கோடியிலிருந்து, 61,415 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் மூலம், 6.24 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது.சுங்க வரிசென்ற ஆகஸ்ட் மாதத்தில், மறைமுக வரி வசூல், 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,644 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.குறிப்பாக, சுங்க வரி வசூல், 8 சதவீதம் உயர்ந்து, 13,782 கோடி ரூபாயாகவும், உற்பத்தி வரி வசூல், 9.9 சதவீதம் அதிகரித்து, 15,902 கோடி ரூபாயாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.இதே போன்று, சேவை வரி வசூலும், 9 சதவீதம் உயர்ந்து, 10,960 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 10,059 கோடி ரூபாயாக இருந்தது என, நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|