பதிவு செய்த நாள்
15 செப்2014
06:43
மும்பை:நடப்பு 2014–15ம் நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்., – ஆக.,), முன்பேர சந்தைகளில் மொத்த வர்த்தகம், 58.53 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 24.46 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது, கடந்த 2013 – 14ம் நிதியாண்டின் இதே காலத்தில், 58.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது. குறிப்பாக, வேளாண் விளைப்பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 20.13 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 6.24 லட்சம் கோடியிலிருந்து, 4.98 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான முன்பேர வர்த்தகமும், 67.55 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 26.67 லட்சம் கோடியிலிருந்து, 8.65 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இவை தவிர, இதர உலோகங்கள் மீதான வர்த்தகமும், கணக்கீட்டு காலத்தில், 50.84 சதவீதம் சரிவடைந்து, 11.10 லட்சம் கோடியிலிருந்து, 5.45 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.மேலும், எரிசக்தி மீதான முன்பேர வர்த்தகமும், 64.13 சதவீதம் குறைந்து, 14.97 லட்சம் கோடியிலிருந்து, 5.37 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, எப்.எம்.சி., மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|