பதிவு செய்த நாள்
15 செப்2014
06:44
புதுடில்லி:கடந்த, 2013 – 14ம் நிதியாண்டில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 66,900 கோடி ரூபாயை (1,115 கோடி டாலர்) எட்டியுள்ளது என, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார்.இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக, தென் ஆப்ரிக்க வேளாண் அமைச்சர் சென்ஜெனி ஜோக்வானா மற்றும் ராதா மோகன் சிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் திராட்சை, கோதுமை, சர்க்கரை மற்றும் பருத்தி ஆகியவற்றை,தென் ஆப்ரிக்கா,குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டது.உலக பொருளாதார மந்தநிலையிலும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், சென்ற நிதியாண்டில், 1,115 கோடி டாலரை எட்டியுள்ளது. இதை, மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.தென் ஆப்ரிக்காவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளது என, ராதா மோகன் சிங் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|