தேயிலை ஏற்றுமதி குறைவால் பாதிப்பு  உள்நாட்டு வர்த்தகத்தை உயர்த்த கோரிக்கைதேயிலை ஏற்றுமதி குறைவால் பாதிப்பு உள்நாட்டு வர்த்தகத்தை உயர்த்த ... ... டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க இதுவே சரியான தருணம்: ரகுராம் ராஜன் டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க இதுவே சரியான தருணம்: ரகுராம் ராஜன் ...
தாவர எண்ணெய் இறக்குமதி 13.33 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2014
00:36

புதுடில்லி: இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 13.33 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில், காணப்படாத அதிகபட்ச அளவாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.மலேசியாஇனிவரும் மாதங்களிலும், தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பாமாயில் உற்பத்தியில், முதல் இரண்டு இடங்களில் உள்ள, இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள், தங்களின் கையிருப்பை குறைக்கும் வகையில், குறைந்த விலையில், அதிகளவில் தாவர எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.
இது, உள்நாட்டு தாவர எண்ணெய் விலையில், தாக்கத்தை ஏற்படுத்தும் என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.எனவே, உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க, குறைந்த விலையில், இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை கட்டுப்படுத்தும் வகையில், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என, எஸ்.இ.ஏ., மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.சென்ற 2013ம் ஆண்டு ஜனவரியில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 11.60 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. அதன்பின், சென்ற ஆகஸ்டில் தான், தாவர எண்ணெய் இறக்குமதி இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்ற ஆகஸ்ட்டில், தாவர எண்ணெய் இறக்குமதி, 76 சதவீதம் அதிகரித்து, 13.33 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்தாண்டு ஆகஸ்டில், 7.57 லட்சம் டன்னாக இருந்தது.சூரியகாந்தி எண்ணெய்ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயிலின் பங்களிப்பு, 8,05,131 டன்னாகவும், சோயா எண்ணெய் பங்களிப்பு, 3,50,373 டன்னாகவும் உள்ளது.இவை தவிர, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 1,40,349 டன்னாகவும் உள்ளது. அதேசமயம், சமையல் சாராத எண்ணெய் வகைகள் இறக்குமதி, 12,135 டன் என்ற அளவிலேயே காணப்படுகிறது.நடப்பு 2013–14ம் சந்தைப்படுத்தும் பருவத்தின், நவம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான பத்து மாத காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 95.25 லட்சம் டன்னாக எகிறியுள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 87.92 லட்சம் டன்னாக இருந்தது.-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)