பதிவு செய்த நாள்
16 செப்2014
00:54
மும்பை: இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் திரட்டிய கடன், சென்ற ஆகஸ்டில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 30,420 கோடி ரூபாயாக (507 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 13,860 கோடி ரூபாயாக (231 கோடி டாலர்) இருந்தது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரட்டப்பட்ட கடனில், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவைப்படாத வழிமுறையில் (ஆட்டோமேட்டிக் ரூட்) 53 நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு வர்த்தக கடன், 453 கோடி டாலராகவும், முன் அனுமதியுடன் கூடிய வழிமுறையில் (அப்ரூவல் ரூட்) 5 நிறுவனங்கள் திரட்டிய கடன், 5.41 கோடி டாலராகவும் உள்ளன.பாரத் போர்ஜ், தேவபார்ம் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், சேசா ஸ்டெர்லைட், பெர்கின்ஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவு கடன் திரட்டிய நிறுவனங்களின் பட்டியிலில் முக்கிய இடங்களை பிடித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|