பதிவு செய்த நாள்
16 செப்2014
00:58
மும்பை :சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் சென்ற ஆகஸ்டில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவில் சுணக்கம் கண்டுள்ளது போன்றவை, பங்கு வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’, முறையே, 0.90 சதவீதம் மற்றும் 0.78 சதவீதம் சரிவை கண்டன.நேற்றைய வியாபாரத்தில், உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 1.69 சதவீதம் சரிவை கண்டது.
இதையடுத்து, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்ப துறை நிறுவன பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவை சந்தித்தன.அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.சீனாவிலும் தொழில் துறை உற்பத்தி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 244.48 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,816.56 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், சேசா ஸ்டெர்லைட் உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், உள்ளிட்ட, ஐந்து நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 63.50 புள்ளிகள் சரிவடைந்து, 8,042 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|