பதிவு செய்த நாள்
16 செப்2014
10:18
மும்பை : முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில பங்குகளை வாங்க தொடங்கியதால் உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் சற்றுநேரத்தில் சரிந்தன. பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த போதிலும், அமெரிக்க வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக வெளியான தகவலால் இந்திய பங்குசந்தைகள் நேற்று சரிந்தன. இந்நிலையில் இன்று(செப். 16ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 44.73 புள்ளிகள் உயர்ந்து 26,861.29-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 2.90 புள்ளிகள் உயர்ந்து 8,044.90-ஆகவும் இருந்தன. ஆனால் சற்றுநேரத்திலேயே டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி., ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததால் பங்குசந்தைகள் மீண்டும் சரிந்தன. காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 58.03 புள்ளிகள் சரிந்து 26,758.53-ஆகவும், நிப்டி 17.70 புள்ளிகள் சரிந்து 8,024.30ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|