பதிவு செய்த நாள்
16 செப்2014
17:12
மும்பை : கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. குறிப்பாக பணவீக்கம் குறைந்தபோதிலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த எண்ணியிருப்பதால் ஒரு தகவல் அடிபடுகிறது. இதன்காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 324.05 புள்ளிகள் சரிந்து 26,492.51-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 8 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்று 109.10 புள்ளிகள் சரிந்து 7,932.90-ஆக முடிந்தது. கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளன.
சென்செக்ஸ் அளவிட உதவும் 30 நிறுவனங்களில், அநேக நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக டாடா பவர் நிறுவன பங்குகள் 5.85 சதவீதம் சரிந்தது. இவை தவிர்த்து டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, என்டிபிசி., டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி., ரிலையன்ஸ், கெயில், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ், எல்அண்ட்டி., நிறுவன பங்குகளும் சரிந்தன. அதேசமயம் டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், ஐடிசி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இன்போசிஸ் நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|