பதிவு செய்த நாள்
16 செப்2014
23:42
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2.35 சதவீதம் சரிவடைந்து, 2,695 கோடி டாலராக (1.62 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை:அதேசமயம், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி, 2.08 சதவீதம் அதிகரித்து, 3,779 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகமாக உள்ளதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 1,084 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.கணக்கீட்டு மாதத்தில், தங்கம் இறக்குமதி, 203 கோடி டாலர் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின்இதே மாதத்தில், 74 கோடி டாலர் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், எண்ணெய் இறக்குமதி, மதிப்பீட்டு மாதத்தில், 14.97 சதவீதம் சரிவடைந்து, 1,283 கோடி டாலராக குறைந்துள்ளது.இருப்பினும், எண்ணெய் சாராத இதர பொருட்கள் இறக்குமதி, 13.82 சதவீதம் உயர்ந்து, 2,495 கோடி டாலராக எகிறியுள்ளது.
கடந்த மே மற்றும் ஜூலை மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி முறையே, 12.4 சதவீதம் மற்றும் 10.22 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், சென்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றுமதி சுணக்கம் கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி, 7.31 சதவீதம் உயர்ந்து, 13,479 கோடி டாலராக அதிகரித்துள்ளது.ஜவுளி துறை:இதே காலத்தில், இறக்குமதி, 2.69 சதவீதம் குறைந்து, 19,094 கோடி டாலராக உள்ளது.
இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 5,615 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.இதற்கிடையே, வரும் 2030ம் ஆண்டிற்குள், சர்வதேச ஏற்றுமதியில் (மதிப்பின் அடிப்படையில்), இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் என, எச்.எஸ்.பீ.சி., மதிப்பீடு செய்துள்ளது.குறிப்பாக, மருந்து, போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட துறைகள், ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|