பதிவு செய்த நாள்
16 செப்2014
23:43
புதுடில்லி:இந்திய பங்குச் சந்தைகளில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி 2.11 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அதிக சொத்து கொண்ட தனிநபர்கள் பங்கேற்பு ஆவணங்களை பயன்படுத்தி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு நேரம் மற்றும் செலவு ஆகியவை மிச்சமாகின்றன.மத்தியில் நிலையான அரசு அமைந்ததையடுத்து, கடந்த சில மாதங்களாகவே, பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்வது சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் வரையிலான காலத்தில், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 2,11,499 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய ஜூலை நிலவரப்படி, 2,08,284 கோடி ரூபாயாக இருந்தது.குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில், நிகர அளவில், 5,400 கோடி ரூபாயும், கடன் சந்தைகளில், 17 ஆயிரம் கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.
ஆறு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக, சென்ற ஜூன் மாதத்தில் தான், பங்கேற்பு ஆவணங்கள் மூலமான முதலீடு, 2.24 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|